சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்...
திரைஇசைப் பாடல்களைக் கேட்டு ரசிப்பது என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான விஷயம். முக்கியமாக ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்தமான பாடல்கள் என்று ஒரு பெரிய வரிசையே வைத்திருப்பர்கள். அப்படிப் பாடல்கள் ஒருவருக்குப் பிடித்துப் போக பல்வேறு காரணங்கள் இருக்கும். அதில் முக்கியனானது இசை. அதிலும் சிலருக்கு மனதை வருடும் மெல்லிசைப்
பாடல்கள் பிடிக்கும்; சிலருக்கு 'குத்துப்' பாடல்கள் பிடிக்கும். மற்றொன்று பாடல் வரிகள். சில பாடல்களில் இசையமைப்பு, வரிகள் என்று இரண்டுமே நன்றாக இருக்கும்.
அதோடு மட்டுமில்லாமல், சில பாடல்களைக் கேட்கும் போது அது நம்மை பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்லும். அதாவது, அப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தைப் பார்த்த இடம்,
ஊர், கூடப் படம் பார்த்த நண்பர்கள், முக்கியமாக கல்லூரி வாழ்க்கை என பல நிகழ்ச்சிகள் நம் கண் முன்னே விரியும்.
சில பாடல்களைக் கேட்கும் போது, அந்தப்பாடலின் திரைப்படக்காட்சிகள் கூட நினைவுக்கு வரும். அதாவது, அந்தப் பாடல் ஒரு நல்ல திரைப்படத்தில் திரைக்கதைக்குப் பொருத்தமாக, பொருத்தமான இடத்தில் இடம் பெற்றிருந்தால். ஏனென்றால், சில பாடல் விரிகள் அந்தப் படத்தின் கதைக் கருவை அப்படியே சில வரிகளில் சொல்லிவிடும். இன்னும், சில பாடல்களில் இடம் பெற்ற ஒரே ஒரு வரி, அந்தப் படத்தின் 'ஒரு வரிக் கதை' என்று சொல்லும் விதத்தில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பாடல் வரி தான். "சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்"
மின்சாரக்கனவு படத்தின் கரு என்பது 'யாருக்கு எப்போது காதல் வரும் என்பது யாருக்கும் தெரியாது; ஏன் அவங்களுக்கே தெரியாது" என்பது தான். அதைத் தான் இந்தப் பாடல், "சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்" என்று அழகாக ஒரே ஒரு வரியில் சொல்லிவிட்டது.
மனதை சிலர் குரங்கு என்கிறார்கள். ஆனால், இங்கே, அதே மனசு ஒரு பூவாக சொல்லப்படுகிறது. அதுவும், மொட்டாக இருந்து மலரும் பூ என்று. உண்மையில் மனசு ஒரு புதிர் தான்.
சரி. இப்போது பாடல் கேட்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. ஆனால், இன்னும் அந்தப் பாடல் இடம் பிடித்த திரைப்படத்தைப் பார்க்க வில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இபோது என்ன பண்ணலாம்? நீங்களே பாடல் வரிகளுக்க்கு ஏற்ற மாதிரி கதையையும், திரைக்கதையையும் எழுத வேண்டியது தான். சமீபத்தில், 'சிவாஜி' படப் பாடல்கள் வெளியிடப்பட்டு; ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பு அதைத்தானே எல்லாப் பத்திரிக்கைகளும் செய்தது.
சரி. மீண்டும் அந்தப் பாட்டுக்கு வருவோம். அந்த முழுப் பாடல் வரிகளும் இங்கே.....
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே)
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்பேன்
(வெண்ணிலவே)
இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே)
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே)